Published : 29 Nov 2018 10:04 AM
Last Updated : 29 Nov 2018 10:04 AM

டிச.4 முதல் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம் 

இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் செந்தில் கூறியதாவது:

தமிழக அரசு மருத்துவர்களுக்கு, பிற மாநில அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு மருத்துவர்களுக்கு அலவென்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம். டிச. 4-ம் தேதி முதல் புறநோயாளிகள் சிகிச்சைகளை முழுமையாக நிறுத்த உள்ளோம். டிச.8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முன் திட்டமிட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தையும், மருத்துவ மாணவர்களின் வகுப்புகளை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x