குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
Updated on
1 min read

பொதுமக்களின் சிரமத்தை தவிர்க் கும் பொருட்டு கடந்த 2007-ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டை ராதாநகர் குள்ளஞ்சாவடி பகுதி யில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பல்லாவரம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2010-ல் தொடங்கியது. இதை எதிர்த்து நில உரிமையாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட 26 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நிலம் கையகப்படுத்த 2012-ல் இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சேஷசாயி முன்பாக நடந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் சி.திருமாறன், ‘‘நில உரிமை யாளர்களுக்கு தனிப்பட்ட முறை யில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப் பட்டு அவர்களும் அதிகாரிகள் முன் பாக ஆஜராகி இழப்பீடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றிய பிறகே இத்திட்டம் கொண்டு வரப் பட்டது’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘இத் திட்டத்துக்காக கையகப்படுத்தப் பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் பலருக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது’ எனக்கூறி மனு தாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in