Published : 09 Nov 2018 09:13 AM
Last Updated : 09 Nov 2018 09:13 AM

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி யது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதத்தை தொடங்கினர்.

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச் செந்தூரில்தான் சூரபத்மனை, சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த தாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்த தாக கருதப்படுகிறது. லட்சக்கணக் கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வர். நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ் வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜை

காலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி னார். தொடர்ந்து, யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு தீபாராதனை, பகல் 12 மணியளவில் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய் வானையுடன் எழுந்தருளி பிரகா ரம் வழியாக சண்முகவிலாச மண்ட பத்தை வந்தடைந்தார். அப்போது, பக்தர்கள் கந்த புராணத்தில் உள்ள பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடினர்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவா மிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கந்த சஷ்டி விழாவின் 6 நாட்க ளும் கோயிலிலேயே தங்கி சஷ்டி விரதம் இருப்பதற்காக, நேற்று முன்தினம் முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழி கிணற்றி லும் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். கோயில் பிரகாரத் தில் அங்கபிரதட்சணம் செய்தும், மடிப்பிச்சை ஏந்தியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

சூரசம்ஹாரம்

இன்று (நவ.9) முதல் 12-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப் பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணி முதல் யாக பூஜை ஆகியவை நடை பெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் வரும் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல், கடற்கரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை அவர்கள் நிறைவு செய்வர். 14-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x