

‘கஜா’ புயல் கரையை கடந்ததை அடுத்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சிக்கோட்டத்தில் ரயில்கள் ரத்து, தாமதமாக வருகை, புறப்பாடு குறித்த தகவல்.
ரயில்கள் குறித்த விபரம்:
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் 6 பயணிகள் ரயில்கள், திருச்சி கோட்டத்தில் 8 ப்யணிகள் ரயில் மற்றும் ஒரு விரைவு ரயில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
1. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் 2 பயணிகள் ரயில்கள்,
2.ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் 2 பயணிகள் ரயில்கள்,
3. திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ஒரு ரயில்,
4. ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி செல்லும் ஒரு ரயிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
5.மயிலாதுறையிலிருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்
6.திருச்சியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் 2 பயணிகள் ரயில்கள்
7. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பயணிகள் ரெயில்கள்
8. திருச்சியிலிருந்து மானாமதுரை செல்லும் ரயில்கள்
9. காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில்கள்
10. மன்னார்குடியிலிருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில்கள்
ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக மதுரை, திருச்சிக் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே போன்று கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் 16.11.2018 (இன்று) ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
1. வண்டி எண் 56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று நவ. 16 வெள்ளிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. வண்டி எண் 56726 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் இன்று நவ.16 வெள்ளிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகள் ரயில் திருச்சியிலிருந்து மாலை 6-25 –க்கு புறப்படுவதற்கு பதில் இரவு 7-30-க்கு புறப்படும்
4. இன்று நவ.16 புறப்படக் கூடிய வண்டி எண்.16852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பாது, அது ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 06.00 மணிக்கு புறப்படும்.
5. இன்று நவ.16 புறப்படக் கூடிய வண்டி எண்.22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில், ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பாது. அது ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 09.20 மணிக்கு புறப்படும்.
6. சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் ரயில் 3.45 க்கு கிளம்ப வேண்டியது மாலை 7-15 மணிக்கு கிளம்புகிறது.
7. மதுரையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 2.30 மணிக்கு வரவேண்டிய வைகை ரெயில் மணப்பாறை அருகே மரக்கிளை விழுந்ததால் தாமதமாக வருவதால் மாலை 6-30 மணிக்கு எழும்பூர் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.