Published : 23 Nov 2018 10:23 AM
Last Updated : 23 Nov 2018 10:23 AM
வடகிழக்கு பருவமழையால் சென் னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்கப் படுகிறது. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. மொத்தம் 3,231 மில்லி யன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிப் பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இத னால் ஏரிக்கு விநாடிக்கு 266 கனஅடி தண்ணீர் வருகிறது. இதில் தற்போது 363 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிப் பகுதியில் அதிகபட்சமாக 120 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இதனால் வறண்டு கிடந்த இந்த ஏரிக்கு விநாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 30 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிப் பகுதியில் 106 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. இதையடுத்து ஏரிக்கு விநாடிக்கு 460 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 1058 மில்லியின் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம் பாக்கம் ஏரிப் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் தற்போது 194 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
நான்கு ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடியாகும். தற்போதைய நீர் இருப்பு 1,645 மில்லியன் கனஅடி. கடந்தாண்டு இதேநாளில் 4,524 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இதுபோல் நன்மங்கலம், செம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தும் கனமழையின் காரணமாக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT