Published : 23 Nov 2018 09:53 AM
Last Updated : 23 Nov 2018 09:53 AM

மத்திய அரசுக்கு வைகோ கேள்வி

தஞ்சாவூர்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

புயலால் 57 பேர் உயிரிழந் துள்ளதாக தகவல் வந்துள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, நெல் உள்ளிட்டவை அழிந்துள்ளன. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் கேட்கும் நிதியை தர மாட்டார். அவர் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்.

மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. தமிழத்தின் மீது, பிரதமருக்கு அக்கறை இல்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில் விவசாய கடன், கல்விக் கடன், தொழிற் கடன்களின் அசல் தொகையை 5 ஆண்டு கழித்தே வசூலிக்க வேண்டும். வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x