Published : 27 Nov 2018 10:14 AM
Last Updated : 27 Nov 2018 10:14 AM

30 தொகுதிகளில் வெல்வோம்: பாஜக நம்பிக்கை

நாகர்கோவில்

மக்களவைத் தேர்தலில் தமிழகத் தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். குமரியில் அவர் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. தற்போதுள்ள காலம் கூட்டணி காலம். அதிமுக வும், திமுகவும் கூட்டணியுடன் தான் தேர்தலைச் சந்தித்துள்ளன.

தமிழகத்தில் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை அணுகவேண்டும் என்ற நிலையில் அனைத்து க் கட்சி களும் உள்ளன. பிற மாநிலங்க ளில் இந்த நிலை இல்லை.

புயல் நிவாரண நிதி குறித்து, மத்திய நிதி அமைச் சர் அருண்ஜெட்லியிடம் பேசி உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x