Published : 09 Aug 2014 11:13 AM
Last Updated : 09 Aug 2014 11:13 AM

மணல் திருட்டை தடுத்த விஏஓ மண்டை உடைப்பு: ஒருவர் கைது: மற்றொருவருக்கு வலை

செய்யூரை அடுத்த சேவூர் கிராமத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை 2 பேர் தாக்கியதில் அவர் மண்டை உடைந்தது. ஒருவரை செய்யூர் போலீஸார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங் கல்பட்டு அடுத்த செய்யூர் வட்டத் தில் அமைந்துள்ள சேவூர் கிராமம்.

இங்கு, கிராம நிர்வாக அலுவலராக பிரபாகர் பணி புரிந்து வருகிறார். இங்குள்ள பாலாற்று பகுதியில் மணல் திருட்டை தடுக்க இவரது தலைமையில் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாலாற்று பகுதி யில் லாரியை நிறுத்தி வைத்து சிலர் மணல் அள்ளிக்கொண் டிருந்தனர்.

இதைபார்த்த பிரபாகர் மணல் அள்ளுவது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் பெயர் மணிகண் டன், குணசேகரன் என தெரி வித்துள்ளனர்.

விசாரித்துக் கொண்டிருந்த போதே இருவரும் பிரபாகரை பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், அவருக்கு தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்த பிரபாகரை செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மணிகண் டனை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்ற குணசேகரனை தேடி வருகின்றனர்.

5 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், மாமல்லபுரம், சட்ராஸ் ஆகிய பகுதிகளில் ஏரி மண் மற்றும் மணல் கடத்தி சென்ற லாரிகளை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸார் மடக்கி பிடித்தனர். இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பார்த்தசாரதி, சத்யராஜ், மூர்த்தி, குமார், பார்த்திபன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 2 லாரி, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x