Published : 20 Nov 2018 10:56 AM
Last Updated : 20 Nov 2018 10:56 AM
18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக தங்க.தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதியளித்து அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக் கில் கடந்த ஜூன் 14-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி யது.
இந்த தீ்ர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், அப்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற தங்க.தமிழ்செல்வன் பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார்.
இதன்காரணமாக தங்க.தமிழ் செல்வன் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்கக்கோரி வழக்கறி ஞர் ஸ்ரீமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு ஒருசில நாட்களுக்கு முன்பாகவே அரசுக்கு தெரியும் என்றும், இது விலைகொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் விவாதங்களி லும், பேட்டிகளிலும் தங்க.தமிழ்ச் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த பேச்சு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள் ளாகும் என தொலைக்காட்சியினர் எச்சரித்தபோதும் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கையை எதிர் கொள்ளத்தயார்’’ என்றும் தெரி வித்துள்ளார். எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக தங்க.தமிழ் செல்வன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரான விஜய் நாராயண் நோட்டீஸ் பிறப் பித்து இருந்தார்.
அதன்படி, தங்க.தமிழ்செல்வன் கடந்த ஜூலை மாதம் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்பாக ஆஜராகி, இதற்காக நிபந்தனையற்ற மன் னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்தது தொடர்பாக தங்க.தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர் நீதிமன்றத்தில் தொடரலாம்.
ஏனெனில் விசாரணையின் போது தங்க.தமிழ்செல்வன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுக்கவில்லை. இதுதொடர்பாக மன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.
அரசு தலைமை வழக்கறி ஞருக்கு சட்டப்படி அந்த அதிகாரம் இல்லை என்பதால், அவரது மன்னிப்பை ஏற்க முடியாது.
எனவே தங்க.தமிழ்செல்வ னுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி யளிக்கப்படுகிறது’’ என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT