Published : 24 Aug 2014 01:18 PM
Last Updated : 24 Aug 2014 01:18 PM
புதுவையில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் தற்போது இயங்கவில்லை என்றும் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டன என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியில் எம்ஓஎச் பரூக் கல்வி அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு முகாமை முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, “புதுவையில் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் நோக்கத்தில் ரூ.100 கோடி செலவில் ஒரு திட்டத் துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா அடிக்கல் நாட்டினார். புதுவை அரசு அதை செயல்படுத்தவில்லை. மாநில அரசுக்கு தொலைநோக்கு கொள்கை இல்லாததால் தொழில் வளர்ச்சியில் புதுச்சேரி பின்தங்கி உள்ளது. புதுவையில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் தற்போது இயங்கவில்லை. பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டன. தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரி அரசு வரிச் சலுகை அளிக்காததே இதற்கு காரணம்” என்றார்.
விழாவில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT