Published : 01 Nov 2018 09:01 AM
Last Updated : 01 Nov 2018 09:01 AM

50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி சர்தார் படேலை பெருமைப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக சர்தார் வல்லபபாய் படேலை பெருமைப்படுத்த எதுவும் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சர்தார் படேல் பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய ஒருமைப் பாட்டு தினமாக கொண்டாடப்படு கிறது. இதை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் தேசிய ஒருமைப்பாட் டுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஒருமைப்பாட்டுக்கான ஓட்டமும் நடத்தப்பட்டது. சென்னை தீவுத் திடலில் நடந்த மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய பாது காப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் மற்றும் பி.பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, மாநகராட்சி ஆணை யர் கார்த்திகேயன் தேசிய ஒருமைப் பாட்டுக்கான உறுதிமொழியை வாசிக்க, மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரி கள், அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் திரும்பச் சொல்லி உறுதி ஏற்றுக் கொண் டனர். தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற ஒருமைப்பாட்டுக்கான ஓட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தீவுத்திடலில் தொடங்கி மெரினா கடற்கரையில் இந்த ஓட்டம் முடிந்தது.

நிகழ்ச்சி முடிவில் அவர் பேசிய தாவது: சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண் டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி நம் நாட்டை ஒரே அரசியலமைப்பின் கீழ் எடுத்து வந்த சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சிக்காக கொண் டாடப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி அரசாட்சியில் இருந்தபோது சர்தார் படேலுக்காக 50 ஆண்டுகளாக எதுவும் செய்ய வில்லை. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தது முதல் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். கடந்த 2013-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் முன் சென்னை மெரினா கடற்கரையில், ஒருமைப் பாட்டுக்கான ஓட்டத்தை பெரிய அளவில் நடத்தினோம்.

சர்தார் படேல் நாட்டை ஒருங்கிணைத்த தலைவர் என்பது மட்டுமின்றி, அவர் விவசாயிகள் முன்னேற்றத்துக்கும் உழைத்தார். இதனால், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அளவில் விவசாயிகள் ஏர் முனையில் இருந்தும் இரும்புத்துண்டை எடுத்து வந்து இந்த சிலை அமைக்க அனுப்பி வைத்தோம்.

தொடர்ந்து 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த முயற்சி நடந்து வந்தது. தற்போது நாட்டில் மிக உயர்ந்த உலகளவில் மிக உயர்ந்த படேல் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார். அதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் ஒருமைப்பாட்டுக்கான ஓட் டத்தை நடத்தியுள்ளோம். நாட் டின் ஒற்றுமைக்கு இளைய சமுதாயத்தினர் நிறைய பங்களிப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x