Published : 20 Nov 2018 09:55 AM
Last Updated : 20 Nov 2018 09:55 AM

5 படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 24 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,110 இடங்கள் இருக்கின்றன.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச் எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2018 - 2019-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பித்தவர்களில் பரிசீலனைக்கு பின்னர் தகுதியான 3,566 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பரம்பரை சித்த வைத்தியர் குடும்பத்தினர் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

வரும் 23-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x