Published : 18 Nov 2018 08:41 AM
Last Updated : 18 Nov 2018 08:41 AM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் புயல் சீரமைப்புப் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தாரிடம் புயல் பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயல் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என நேற்று முன்தினம் (நவ.16) நான் தெரிவித்தேன். ஆனால், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரில் வந்து பாதிப்புகளைப் பார்க்கும்போது சீரமைப்பு பணிகள் திருப்திகரமாக இல்லை என்பது தெரியவருகிறது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேவை யில்லாமல் பேசி வருகிறார். அமைச் சர்கள் எல்லாம் மக்களிடமிருந்து தப்பி ஓடி வருகிறார்கள். எனவே, தமிழக அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும்.
புயலால் உடைமைகளை இழந்த வர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசின் நிவாரணம் மக்களின் பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் இருக்க வேண் டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் சென்றார் மு.க.ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT