Published : 15 Nov 2018 12:12 PM
Last Updated : 15 Nov 2018 12:12 PM
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை வரும் டிசம்பர் 16 -ம் தேதி திறக்கப்படும் என, அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் மாதம் 16 -ம் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள்.
ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்து தமிழகத்தில் மட்டுமின்றி -உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.
புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் - கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16 ஆம் தேதி தலைவர் தலைவரின் உருவச் சிலை திறப்பு விழா, எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT