Published : 18 Nov 2018 08:36 AM
Last Updated : 18 Nov 2018 08:36 AM

கொடைக்கானலில் ‘கஜா’ புயலால் சோகம்: மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் மரணம்

கஜா புயலால் ஏற்பட்ட தொடர் மழை யால், கொடைக்கானல் மலைப் பகுதியில் சின்னப்பள்ளம் என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரி வில் சிக்கி சேலம் மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதி யில் பெரும் சேதத்தை ஏற்படுத் தியது. கொடைக்கானலில் நேற்று முன்தினம் காலை கார் மீது மரம் சாய்ந்ததில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த நீலிமா என்ற பெண் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவில் கொடைக்கானல் சின்னப்பள்ளம் என்ற இடத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாள்பாளை யத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரவி (50), கார்த்தி(21), சவுந்திர ராஜன் (40), ராஜேந்திரன்(50) ஆகிய 4 பேரும் மண்ணில் புதையுண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டிடம் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்த இவர்கள், தங்கியிருந்த தகர ஷெட்டின் மீது மண் சரிந்து விழுந்து மூடியதில் நால்வரும் உயிரிழந்தனர். குறைந்த நேரத் தில் அதிக மழை பெய்ததே மண் சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

போக்குவரத்து துண்டிக்கப் பட்டிருந்ததால் இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் 10 கி.மீ. தூரத்துக்கு மேல் நடந்து சென்று சம்பவ இடத்தில் புதைந்து கிடந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். புயல், கன மழையால் கொடைக்கானல் - பழநி, கொடைக் கானல்- திண்டுக்கல் - வத்தல குண்டு சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இத்துடன் கஜா புயலுக்கு கொடைக்கானலில் மட் டும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x