Published : 17 Nov 2018 08:13 AM
Last Updated : 17 Nov 2018 08:13 AM

தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்:  முதல்வரிடம் ராஜ்நாத் உறுதி

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு சாத்தியப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக் கத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், ‘தமிழ கத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பேசி னேன். மத்திய அரசின் சார்பில் சாத்தி யப்படும் அனைத்து உதவிகளும் செய்யப் படும். நிலைமையை ஆராய்ந்து மாநில நிர்வாகத்துக்கு உதவி செய்யுமாறு மத்திய உள்துறைச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x