Published : 15 Oct 2018 08:50 AM
Last Updated : 15 Oct 2018 08:50 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
பெட்ரோல் விலை குறித்த கவலை அனைவருக்கும் இருக்கும். கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த கச்சா எண்ணெய் 44 டால ராக இருந்தபோது பெட்ரோல் விலை யை குறைக்கவில்லை. கடந்த 4, 5 ஆண்டுகளில் இதன் விலை 100 டால ரையும் தாண்டி எங்கோ போய் கொண் டிருக்கிறது. பெட்ரோல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த விலை உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ. 4.50 லட்சம் கோடி வந்து கொண்டுள்ளது. இது மக்களுக்கு செல்ல வேண்டிய பணம். மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும். நாம் சொல் லும் புரட்சி கத்தியின்றி ரத்தமின்றி தான். சினிமாவில் உள்ள நேர்மை அரசியலில் தொடரும். அரசியலில் பன்மடங்கு நேர்மையாக இருக்க முடியும். நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். எதை சொல்கிறேன் என்றால், தயவு செய்து ஓட்டுக்கு விலை நிர்ணயம் செய்பவர்களை அண்டவிடாதீர்கள். உங்களுக்கு சேர வேண்டிய பணம் எங்கெங்கோ கிடங்கு கிடங்காக சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.
படித்தவர்கள் இந்த அரசியல் அசிங்கம் என ஒதுங்கிவிடாதீர்கள். அப்படி ஒதுங்கியதால்தான் அரசியல் அசிங்கம் ஊரையே தூர்த்துவிட்டது. படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றார்.
முன்னதாக ராசிபுரம், புதுச்சத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கமல்ஹாசன் பேசினார். இதேபோல் நாமக்கல்லில் லாரி உரிமையாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT