Published : 20 Oct 2018 11:51 AM
Last Updated : 20 Oct 2018 11:51 AM

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்ட நிலையில், அரபிக்கடலில் உருவான ‘லூபன்’ புயல், வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் ஆகியவை காரணமாக காற்றின் திசை மாறியது. தற்போது இந்த 2 புயல்களும் முடிவுக்கு வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரக் கடல் பகுதி மற்றும் வடக்கு கேரளா - கர்நாடகா ஆகிய இடங்களில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குவதற்கான சூழல்தான் இது என தெரிவித்துள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையும், ஒருசில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், விட்டுவிட்டு மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x