Published : 16 Oct 2018 07:52 AM
Last Updated : 16 Oct 2018 07:52 AM

சென்னை - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு ஏசி டிக்கெட் விலை ரூ.5,175: படுக்கை வசதி டிக்கெட் கட்டணமும் 3 மடங்கு அதிகம்

ஆயுத பூஜையையொட்டி திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட் ரூ.1,275 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175 ஆகவும் உயர்ந்துள்ளன. இந்த பிளக்சி கட்டண முறைகளால் சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வகை சிறப்பு ரயில்களில் பிளக்சி கட்டண முறையில் டிக்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு 20 சதவீத டிக்கெட்களுக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. சுவிதா சிறப்பு ரயில் 2ஏசி, 3ஏசி, படுக்கை வசதி பெட்டிகளில் தலா 20 சதவீதம் என 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஆயுதஜையை முன்னிட்டு வரும் 17, 18-ம் தேதி களில் தாம்பரம் - திருநெல் வேலிக்கு 2 சுவிதா சிறப்பு ரயில் கள் (82617/82613) இயக்கப் படுகின்றன. திருநெல்வேலிக்கு படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட் ரூ.1,275, 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.3,655, 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,175 எனவும் வசூலிக்கப்பட்டன.

இந்த கட்டணங்கள் வழக்க மாக உள்ள கட்டணத்தில் இருந்து, 3 மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, திருநெல்வேலிக்குச் செல்லும் வழக்கமான விரைவு ரயில்களில் படுக்கை வசதிக்கு ரூ.385 என வசூலிக்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக் கும் தற்போது சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதிப்பு

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘ஆயுதபூஜையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யச் சென்றேன். வழக் கமான கட்டணத்தைக் காட்டிலும், சுவிதா சிறப்பு ரயில்களில் உள்ள கட்டணங்கள் அதிக அளவில் இருந்தன. வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்கிச் செல்கிறேன்.

விரைவு ரயில்கள் போல், அதே தடத்தில், அதே பயண நேரத்தில் செல்லும் சுவிதா போன்ற சிறப்பு ரயில்களில் கட்டணத்தை மட்டுமே பல மடங்கு உயர்த்தி இயக்குவது எந்தவிதத்தில் நியாயம்? இதனால், ரயில் பயணத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக் கப்படுகின்றனர்’’ என் றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பண்டிகை நாட்களில் தெற்கு ரயில்வேயில் மிகவும் குறைந்த அளவுக்கே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. பெரும்பாலான விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டி யல் அதிகரித்துள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட் டிகள் இணைப்பது போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில் கள் இயக்குவது பற்றி ரயில்வே வாரியம்தான் முடிவு செய்கிறது.

மக்களின் தேவை அதிகரித்துள் ளதால், கடந்த சில மாதங்களில் சுவிதா சிறப்பு ரயில்களில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்கின்றனர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுவிதா சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x