Published : 03 Oct 2018 09:06 AM
Last Updated : 03 Oct 2018 09:06 AM

விபத்து உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்

தமிழகத்தில் அன்றாடம் நிகழும் விபத்து மரணங்கள் அதிரவைக்கின்றன. சாலை விபத்தில் மரணமடையும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. 2017-ல் மட்டும் தமிழகத்தில் 3,507 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம் 1,831, ஆந்திரம் 1,379. இந்தியாவில்

2014-ல் 12,330 பாதசாரிகள் விபத்தில் உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை, 2017-ல் 20,457 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது 66% உயர்வு. இருசக்கர வாகன விபத்தில் இறப்பவர்களிலும் தமிழகம்தான் முதலிடம். தமிழ்நாடு 6,329, உத்தர பிரதேசம் 5,699, மகாராஷ்டிரம் 4,659.  மிதமிஞ்சிய வேகம் மட்டுமல்ல, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாததும் விபத்துகளுக்கு முக்கியக் காரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x