Published : 05 Oct 2018 12:01 PM
Last Updated : 05 Oct 2018 12:01 PM

ரூ.20 கட்டணத்தில் சிகிச்சை வழங்கிய மந்தைவெளி மருத்துவர் காலமானார்: பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி

சென்னையில் ரூ.20 கட்ட ணத்தில் ஏழை, எளியோ ருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஜெகன் மோகன் தனது 76-வது வயதில் காலமானார். அவரது உடலுக்கு பொது மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட் டம், மேலப்பாவூரை சேர்ந்தவர் மருத்துவர் ஜெகன்மோகன். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த இவர், ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் எண் ணத்தில் மந்தைவெளி பகுதியில் சிறிய அள விலான மருத்துவ மையம் ஒன்றை 1975-ம் ஆண்டு தொடங்கினார்.

ரூ.1 கட்டணம்

ஆரம்பத்தில் சிகிச் சைக்கு வரும் மக்களிடம் இவர் ரூ.1 மட்டுமே கட்ட ணமாக வசூலித்து வந்தார். பிறகு ரூ.5, ரூ.10, என்று சிறிது சிறிதாக கட்டணத்தை உயர்த்தியவர், சமீப கால மாக சிகிச்சைக்கு வருவோ ரிடம் ரூ.20 கட்டணம் மட்டுமே பெற்றுள்ளார். இந்தச் சிறிய தொகையும், செவிலியருக்கான சம்பளம் மற்றும் பிற தேவை களுக்கே செலவாகியுள் ளது.

20 ரூபாய் டாக்டர்

இருப்பினும் ஏழை களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் தொடர்ந்து ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூ லித்துள்ளார். இதனா லேயே அவர் ‘20 ரூபாய் டாக்டர்’ என அனைவரா லும் அன்புடன் அழைக்கப் பட்டுள்ளார். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளும் குறைந்த விலை உடைய தாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு கடந்த 43 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் ஜெகன் மோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவு மந்தைவெளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பொதுமக்கள் திரளாகச் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்ச லிக்கு பிறகு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x