Published : 24 Oct 2018 10:18 AM
Last Updated : 24 Oct 2018 10:18 AM

விருதுகளை திரும்பக் கொடுத்துவிட்டு கவிஞர் வைரமுத்து வழக்கை சந்திக்க வேண்டும்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தல்

விருதுகளை வைரமுத்து திரும்பக் கொடுத்துவிட்டு வழக்கைச் சந்திக்கிறேன் என்று கூறினால் அவர் கவுரவமான நிலைக்கு வருகிறார் என்று அர்த்தம் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் திருவில்லி புத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பாஜகவில் அமைச்சராக உள்ள ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்குத் தொடுத்துள்ளார். ஆனால், வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். தனது விருதுகளை எல்லாம் அவர் திரும்பக் கொடுத்துவிட்டு வழக்கைச் சந்திக் கிறேன் என்று கூறினால் அவர் கவுரவ மான நிலைக்கு வருகிறார் என்று அர்த்தம். ஆனால், அவர் அப்படிக் கூறவில்லை.

ஆகவே, பெரியாரிசம் பேசுபவர் கள் பெண்ணியத்துக்காக இருப்ப தாகக் கூறுவது போலி. நான் விளக்கமாகக் கூற விரும்பவில்லை. பெரியார் பற்றி பேசுகிறவர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதைப் பார்ப்பது அரிதாக உள்ளது.

‘மீ டு’ பெண்கள் கையில் உள்ள கூர்மையான ஆயுதம். அதை அவர் கள் சரியாகப் பயன்டுத்தினால் பெண் களிடம் சீண்டல்களும், சில்மிஷங்களும் செய்ய நினைப்பவர்கள்கூட அச்சப் படுவார்கள். இதன் மூலம் யாரையா வது தண்டிக்க முடியுமா என்றால் அது சிரமமான விஷயம்தான். ஏனெனில் ஆதாரம் கேட்க முடியாது. ஆனால், தவறு செய்தவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். அந்த விதத்தில் தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள் என்பதால் அதை வரவேற்கிறேன்.

கடந்த 7 நாட்களாக சபரிமலையில் நடை திறந்திருந்தது. பல்லாயிரக் கணக்கானோர் சென்றார்கள். 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நாங்கள் காத்திருக்கத் தயார் என்றனர். ஆனால், அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசு, யாரோ ஒரு பெண்ணை காவல் துறை சீருடையில், 200 பேர் கொண்ட கமாண்டோ படையுடன் அழைத்துச் சென்றுள்ளது. இதற்காக கேரள அரசின் மீது வழக்கே தொடர முடியும்.

கேரள முதல்வரின் நடவடிக்கையை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இனிமேல் ஒரு ஓட்டுகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு கேரளாவில் கிடைக்காது என்றார்.

இதேபோன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எச். ராஜா அளித்த பேட்டி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள மாநில பினராய் விஜயன் அரசு இந்து விரோதப் போக்குடன் செயல்படுகிறது.

தீபாவளியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வருங்காலத்தில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்தக் கூட தடை விதிக்கும் சூழல் ஏற்பட்டுவிடும். ஆகவே, பட்டாசு உற்பத்திக்கு தடையை விலக்கியதுபோல பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாட்டையும் விலக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x