Published : 30 Aug 2014 10:10 AM
Last Updated : 30 Aug 2014 10:10 AM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியா?: தேமுதிக, பாஜக விரைவில் அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான உள் ளாட்சிப் பதவிகளை நிரப்பும் வகை யில் உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடக்க வுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 28-ம் தேதி வெளியிட்டது. வேட்புமனு தாக்கலும் அன்றைய தினமே தொடங்கியது.

இதற்கிடையில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டுள்ளனர். வேட்பாளர் களைத் தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் தரப்படவில்லை என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சியான தேமுதிக என்ன நிலை எடுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. ஓரிரு நாளில் அறிவிப்பார்’’ என்றனர்.

பாஜக கருத்து

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம், கோவை தொகுதிகளில் பாஜக கணிசமான ஓட்டுக்களை பெற்றது. மேலும் குன்னூரில் பாஜகவிற்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. பாஜகவின் மாநில தேர்தல் கமிட் டியை கூட்டி தேர்தலில் போட்டி யிடுவது குறித்து முடிவெடுக்கப் டும். மேலும் இந்த ஆலோசனை யில் கூட்டணி கட்சிகளின் நிலைப் பாட்டிற்கு ஏற்ப செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவின் கூட்டணியில் அங் கம் வகிக்கும் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி இடைத்தேர்தல் குறித்த தங்கள் நிலைப்பாட்டை கூறாத நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x