Published : 18 Oct 2018 09:44 AM
Last Updated : 18 Oct 2018 09:44 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்களும், வியாபாரிகளும் நேற்று குவிந்தனர்.
கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் ஆயுத பூஜை சிறப்புச் சந்தை கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்புச் சந்தையில் ஒரு தேங்காய் ரூ.20 - ரூ.30, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.50, மாவிலைக் கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.30, சாமந்திப்பூ, மல்லிப்பூ, கனகாம்பரம்பூ முழம் ரூ.20, கதம்ப பூ முழம் ரூ.30, ஒரு படி பொரி ரூ.20, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.50, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.100, ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.60, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.90, மாதுளை ரூ.90, 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.350, ஒரு கரும்பு ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பூஜை பொருட்கள் ஒரே இடத் தில் குறைந்த விலையில் கிடைப்பதால், நேற்று ஆயிரக்கணக்கான பொது மக்களும், சிறு வியாபாரிகளும் சிறப்பு சந்தையில் குவிந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதி களில் இயங்கும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் நேரடியாக கோயம்பேட்டுக்கு வந்து அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் நேற்று சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதாலும், அவர்களுக்கான சிறப்பு பேருந்துகள், கோயம்பேடு சந்தை வழியாக அணிவகுந்து நின்ற தாலும், பூஜை பொருட்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந் ததாலும், கோயம்பேடு சந்தையைச் சுற்றி நேற்று மாலை கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் கார ணமாக, பொருட்களை வாங்கியோர், திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
நேற்று ஆயுதபூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்த நிலையில், பிற்பகலில் திடீர் மழை பெய்ததால், பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாயினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT