Published : 24 Oct 2018 09:21 AM
Last Updated : 24 Oct 2018 09:21 AM
அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நலிவடைந்த தொழிலாளர்கள் 106 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதியுதவியை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.
மே தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர் களாக உள்ள நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக் கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவ லகத்தில் நேற்று நடந்தது.
அதைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 6 லட்சத்தை குடும்ப நல நிதியுதவியாக முதல்வரும், துணை முதல்வரும் வழங்கினர். கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த 3 தொண்டர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.2 லட்சமும், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. மொத்தம் 111 பேருக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்துக்கான வரைவோலைகள் அதிமுக சார்பில் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பகல் 12 மணிக்கு முதல்வர், துணை முதல்வர், இணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT