Published : 08 Oct 2018 02:54 PM
Last Updated : 08 Oct 2018 02:54 PM

திருப்பூரில் கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அவதி; பொதுமக்கள் மறியல்

திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தெற்கு தோட்டம், சங்கிலிப்பள்ளம் மற்றும் பெரிச்சிபாளையம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், தாராபுரம் சாலையில் உள்ள தெற்குதோட்டம், சங்கிலிப்பள்ளம் மற்றும் பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நள்ளிரவு பலரும் வீட்டு மாடிகளில் மாடியில் தஞ்சம் அடைந்தனர்.

பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தற்போது வரை காலை உணவு இன்றி தவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர் தாராபுரம் சாலையை மறித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x