Published : 10 Oct 2018 08:05 AM
Last Updated : 10 Oct 2018 08:05 AM

வருமான வரி நிறுவனங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

கட்டாய கணக்குத் தணிக்கை செய்யும் நிறுவனங்கள் தங்களு டைய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், கடைசி தேதியை நீட்டிக்குமாறு நிறுவ னங்கள் தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் கடைசி தேதியை இம்மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்தது.

இதற்கிடையே, இத்தேதியை மேலும் நீட்டிக்குமாறு நிறுவனங் கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வந்தது. இதை ஏற்று கடைசி தேதியை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தர விட்டுள்ளது.

எனினும், விதி 234-ஏ-யின் படி, வரும் 30-ம் தேதிக்குப் பிறகு கால தாமதமாக தாக்கல் செய்யும் வருமான வரி கணக்குத் தாக் களுக்கு வட்டித் தொகை செலுத் துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என வரு மானவரித் துறை தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x