Published : 22 Oct 2018 09:13 PM
Last Updated : 22 Oct 2018 09:13 PM
புதுச்சேரியில் கலை இலக்கிய அமைப்பைத் தொடங்க இளையராஜா திட்டமிட்டு, இடங்களைப் பார்வையிட்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா புதுச்சேரிக்கு இன்று வந்திருந்தார். அவரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரியில் கலை இலக்கிய அமைப்பைத் தொடங்குவது தொடர்பாக தெரிவித்தவுடன் கலைகள் கற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூடம் செயல்படுவது தொடர்பாக முதல்வர் தெரிவித்தார். அதையடுத்து கலைக்கூடம் அமைந்துள்ள தொகுதியின் எம்எல்ஏ ஜெயமூர்த்தியுடன் அவரை பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார்.
பாரதியார் பல்கலைக்கூடத்துக்குச் சென்ற இளையராஜா அப்பகுதியை பார்வையிட்டு சென்னை திரும்பினார். இதுதொடர்பாக எம்எல்ஏ ஜெயமூர்த்தியிடம் கேட்டதற்கு, "இயல், இசை, நாடகம் தொடர்பான அமைப்பை தொடங்கும் எண்ணத்தில் இளையராஜா உள்ளார். அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு இளையராஜாவை அழைத்துச் சென்றோம். அவர் பார்வையிட்டுள்ளார். இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT