Published : 13 Oct 2018 08:36 AM
Last Updated : 13 Oct 2018 08:36 AM

இந்த ஆண்டில் அதிகபட்ச விலை உயர்வு: பவுனுக்கு ரூ.280 உயர்ந்து 24,208க்கு விற்பனை 

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.280 உயர்ந்து 24 ஆயிரத்து 208க்கு விற்பனை செய்யப்பட்டது இந்த ஆண்டில் இதுதான் அதிகபட்சமாக விலையாகும்.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 208-க்கு நேற்று விற்பனை செய்யப் பட்டது. இந்த ஆண்டில் இதுவே அதிகபட்சமான விலை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 208-க்கு விற்கப்ப ட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 26க்கு விற்கப்பட் டது. இது தொடர்பாக சென்னை தங் கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் உள்ள சர்வதேச பெடரல் வங்கியின் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் வலு வடைந்து சர்வதேச அளவில் தங் கம் விலை உயர்ந்துள்ளது. இந் தியாவின் ரூபாய் மதிப்பில் இருந்து சிறிய அளவில் முன்னேற்றம் ஏற் பட்ட போதிலும், சர்வதே அளவில் விலை உயர்வால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x