Published : 23 Oct 2018 10:05 AM
Last Updated : 23 Oct 2018 10:05 AM
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய வாகனங்களால், பரனூர் சுங்கச் சாவடி மற்றும் செங்கல்பட்டு - சென்னை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயுதபூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். இதனால் சென்னை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் இடையே பரனூர், புலிப்பாக்கம், ராஜாகுளிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றபின் ஒன்றாக சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காலங்களில் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அதேபோல் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT