Published : 20 Oct 2018 11:10 AM
Last Updated : 20 Oct 2018 11:10 AM
திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் சென்னையில் தங்கி கடந்த 20 ஆண்டுகளாக கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு திருவான்மியூர் வால்மீகி கோயில் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழி யாக ஆட்டோவில் வந்த 2 பேர் கிருஷ்ணமூர்த்தியை எழுப்பி சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. ஆட்டோவில் வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து பெட்ரோலை கிருஷ்ணமூர்த்தியின் தலை யில் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
இதை சற்றும் எதிர் பாராத அவர் வலியால் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத் தினர் திரண்டனர். உடனடி யாக அவரை மீட்டு சிகிச் சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து திருவான்மியூர் போலீஸார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்து திருவான்மியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரது நண்பர் விஜயராஜா ஆகி யோரைக் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் குடித்து விட்டு தகராறு செய்துள்ள தாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT