Published : 06 Oct 2018 09:36 AM
Last Updated : 06 Oct 2018 09:36 AM
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 1077 அல்லது 1913 என்ற எண்களில் தொடர்பு கொள் ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட வரு வாய் அலுவலர்கள், வருவாய் கோட் டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது: சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 205 தாழ்வான பகுதிகள் மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ளது. தனியார் திருமண மண்டபம், தனியார் கிடங்கு, தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் மழை யால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற் படும் பேரிடர் தொடர்பாக கண்காணிக்க வருவாய்த் துறையினர், மாநகராட்சி, காவல் துறை, சுகாதாரத் துறையினருடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப் பாட்டு அறை 4-ம் தேதிமுதல் செயல் பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை, வெள்ள நேரங்களில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு ‘1077’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சிக்கு ‘1913’ என்ற எண்ணுக்கும் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இது தவிர, மாநகராட்சி, 3 கோட்டாட்சியர்கள், 16 வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல் படும் கட்டுப்பாட்டு அறைகளையும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் கூறியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT