Published : 29 Oct 2018 09:51 AM
Last Updated : 29 Oct 2018 09:51 AM

சுவரில் நாய் சிறுநீர் கழித்ததால் பெண் மீது தாக்குதல்:  ஒருவர் கைது; போலீஸார் தீவிர விசாரணை

வீட்டுச் சுவரில் நாய் சிறுநீர் கழித்ததால், பெண்ணை தாக்கிய வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடிப்பாக்கம் அடுத்த உள்ள கரம் அண்ணா தெருவைச் சேர்ந்த சுகுணா (45) தன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை நாயுடன் தனது வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அம்பேத்கர் தெருவில் உள்ள சத்திய நாராயணன் என்பவரது வீட்டின் அருகே சென்றபோது நாய் பலமாக குரைத்து, அவர் வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் சத்திய நாராயணன், சுகுணாவைத் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணன் வீட்டில் இருந்த தண்ணீர்ப் பைப்பால் சுகுணாவை பலமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத் தில் உலவ விட்டுள்ளனர். தற் போது இந்த வீடியோ இணையத் தில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், படுகாயம் அடைந்த சுகுணா ஆதம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x