Published : 11 Oct 2018 09:04 AM
Last Updated : 11 Oct 2018 09:04 AM
இந்திய கால்பந்து அணி சீனாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் வரும் 13-ம் தேதி சீனாவின் சுஹோ நகரில் உள்ள சுஹோ ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இந்திய அணியை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன் டைன் அறிவித்துள்ளார்.
கால்பந்து போட்டிகளில் இது வரை இந்தியா, சீனா அணிகள் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சீனா 12 முறை வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது.
இரு அணிகளும் கடைசியாக 1997-ம் ஆண்டு கொச்சியில் நடை பெற்ற நேரு கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. 21 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இரு அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி விவரம்
கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங், அம்ரிந்தர் சிங், கரண்ஜித் சிங்.
டிபன்டர்ஸ்: பிரிதம் கோதல், சர்தக் கோலி, சந்தேஷ் ஜின்கன், அனாஸ் எடதோடிகா, சலாம் ரன்ஜன் சிங், சுபாஷிஸ் போஸ், நாராயண் தாஸ்.
நடுகளம்: உடான்டா சிங், நிகில் பூஜாரி, பிரணாயி ஹலேடர், ரவ்லின் போர்கஸ், அனிருத் தாபா, வினித் ராய், ஹலிச்ரண் நர்ஸரி, ஆஷிக் குரூனியன்.
முன்களம்: சுனில் சேத்ரி, ஜெஜெ லால்பெகுலா, சுமித் பாஸி, பரூக் சவுத்ரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT