Published : 30 Oct 2018 08:18 AM
Last Updated : 30 Oct 2018 08:18 AM

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார்: முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் கே.பழனி சாமிக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘முதல்வர் பழனிசாமி இந்த டெண்டர்களை தனது உறவினர் களுக்கும், வேண்டியவர்களுக்கும் ஒதுக்கியுள்ளார். டெண்டர் ஒதுக் கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பி யும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை’ என்றும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து, உரிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். முதல்கட்ட விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்’’ என கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழக முதல்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. திமுக சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘‘முதல்வருக்கு எதிராக திமுக சுமத்தியுள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையே முறையாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில் சிபிஐ விசாரணை தேவையற்றது. எனவே இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

முதல்வர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுவில், ‘‘திமுகவின் ‘லெட்டர் பேடில்’ புகார் அளித்த தன் மூலம், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது நிரூபணமாகிறது.

மேலும், இதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து முதல்வர் தரப்பு விளக்கத்தையும் கேட்க வில்லை. அவ்வாறு செய்யாமல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது சட்ட விரோதம். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தால், டெண்டரை ரத்து செய்ய வேண்டியதுதானே’’ என்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பினர்.

பின்னர், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x