Published : 11 Oct 2018 08:23 AM
Last Updated : 11 Oct 2018 08:23 AM

வீடுகளில் சிலைகள் வைத்திருந்த ரன்வீர்ஷா, கிரண் ராவ் உட்பட 13 பேருக்கு மீண்டும் சம்மன்: நாளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

வீடுகளில் இருந்து புராதன சிலைகள் கைப்பற்றப்பட்ட விவ காரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரன்வீர்ஷா, கிரண்ராவ் உட்பட 13 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவி னர் மீண்டும் சம்மன் அனுப்பி யுள்ளனர்.

சென்னையில் உள்ள ரன்வீர்ஷா வின் வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களில் இருந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் 244 சிலைகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த கடந்த 5-ம் தேதியும் பின்னர் 10-ம் தேதியும் (நேற்று) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ரன்வீர் ஷாவுக்குப் பதில் அவர் வழக்கறிஞர் கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜராகி கடிதம் கொடுத்தார். அதில் ரன்வீர்ஷா இன்னும் 2 நாட்களில் ஊரில் இருந்து திரும்பி வந்து விடுவார். அதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் ரன்வீர்ஷாவின் தோழி கிரண்ராவ் வீட்டில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக கிரண் ராவ், அவரது மேலாளர் தயாநிதி, காசாளர் நரேன், ஊழியர் செந்தில் உட்பட 12 பேரை கும்பகோணம் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜரா குமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் நரேன் மட்டுமே கும்பகோணம் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். மற்றவர்கள் விசாரணையை சென்னையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனைவரின் கோரிக்கையையும் நிராகரித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் 12-ம் தேதி (நாளை)அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் ரன்வீர்ஷா, கிரண் ராவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிலைகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x