Published : 24 Oct 2018 10:55 AM
Last Updated : 24 Oct 2018 10:55 AM
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள குட்டை அருகே மேலும் 4 சிலைகளை போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
வெண்கலத்தால் ஆன இந்சிலைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இன்னும்,மீட்கப்படாமல் உள்ள ஒரு சிலையே ரூ.1.98 கோடி மதிப் புடையது. இதற்கிடையே, சிலை திருட்டு தொடர்பாக செஞ்சி அருகே சிட்டாம்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ்(35), ராஜசேகர்(27), அலிபாஷா என்கிற சௌகத் அலி (24), செஞ்சியை சேர்ந்த மேகநாதன்,
மேல்களவாயைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன்(32) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் திருடு போன ஜோலா மாலினி சிலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT