Published : 30 Oct 2018 02:37 PM
Last Updated : 30 Oct 2018 02:37 PM

சட்டப்பேரவை தேர்தல்; ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரு அணிகள் அமையும்: கராத்தே தியாகராஜன்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போது ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும், ரஜினி தலைமையில் ஒரு அணியும் அமையும் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் இன்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ரஜினியுடனான சந்திப்பு குறித்து கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ரஜினியுடன் கடந்த 30 வருடங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன். நேற்று அவரைச் சந்தித்தபோது பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். முரசொலியில் அவரைப் பற்றி வெளிவந்த கட்டுரை குறித்தும் விவாதித்தோம்.

ரஜினி மதிக்கும் தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போது ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும், ரஜினி தலைமையில் ஒரு அணியும் அமையும் என்று நினைக்கிறேன்.

பல்வேறு தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து வருகிறார்கள். தமிழக மக்கள் அனைவரும் ரஜினி மேல் நம்பிக்கை வைத்துள்ளனர்.

காங்கிரஸுடன் கமல்ஹாசன் கூட்டணி பற்றி பேசுகிறாரே என்கிற கேள்விக்கு ரஃபேல் விமான ஊழல் குறித்து கமல் வாயே திறக்கவில்லை, கமல் பாஜகவின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்'' என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x