Published : 05 Aug 2018 03:14 PM
Last Updated : 05 Aug 2018 03:14 PM
கோவையில் தாய் இறந்தது தெரியாமல் அவரது சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்திருக்கிறார் அவரது மகள். இந்தச் சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியமேரிக்கு வயது 81. இவருடைய கணவர் தேவசகாயம் ஏற்கெனவே இறந்து விட்டார், இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இன்னொரு மகள் செல்வி (35) தாய் பாக்கியமேரியுடன் வசித்து வந்தாள். செல்விக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 4ம் தேதி இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச சந்தேகம் அடைந்த அண்டை வீட்டினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாக்கியமேரி இறந்து கிடந்துள்ளார்.
இறந்து 2 நாட்கள் ஆகியும் மகள் செல்விக்கு தாய் இறந்தது தெரியவில்லை. இதனையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வந்து பாக்கியமேரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
தாய் இறந்தது கூடத் தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடலுடன் இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT