Published : 28 Aug 2014 11:23 AM
Last Updated : 28 Aug 2014 11:23 AM

ஆசிரியர் அடித்ததால் 4 மாணவர்கள் காயம்

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள டி.வெங்கிடாபுரத்தில் சிஎஸ்ஐ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஷீலா சுகந்தி. ஆசிரியர் பிரபாகரன் ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியை ஷீலா சுகந்தி செவ்வாய்க்கிழமை விடுப்பில் இருந்துள்ளார். பிரபாகரன் மட்டும் பணியில் இருந்துள்ளார். பள்ளிக்கு ஒரு சில மாணவ, மாணவிகள் ஒழுங்காக வருவதில்லை, சரியாக படிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பெரியசாமி (10), வீரகுமார் (10), வீராசாமி (9), தீபிகா (5) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை பிரபாகரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா புதன்கிழமை அரவக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் மாணவர்கள், மாணவியிடமும் அவர்களது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியை ஷீலா சுகந்தி விடுப்பில் உள்ள நிலையில், ஆசிரியர் பிரபாகரனும் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை விடுப்பு எடுத்ததால் புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சித்ராவிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கு சரியாக வராத மாணவனை கண்டித்த ஆசிரியரை மாணவன் கல்லெடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையும், பள்ளிக்கு செல்ல மறுக்கும் மாணவ, மாணவிகளை பெற்றோர் கண்டிக்க கேட்டதால் அவர்களையும் ஆசிரியர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்த மாணவி மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை, ஆசிரியர் இருவரும் விடுப்பு என்பதால் பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x