Published : 14 Aug 2018 08:16 AM
Last Updated : 14 Aug 2018 08:16 AM
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராசுக்குட்டி (எ) கனகசுந்தரம் (37). பிளம்பர் ஒப்பந்ததாரர். திமுகவைச் சேர்ந்த இவர், திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார்.
கருணாநிதி மறைந்தபோது, அவரது சடலத்தை மெரினாவில் அடக்கம் செய்ய வலியுறுத்தியும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்தும், முதல்வர் கே.பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அப்பகுதி யைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன், திருப்பூர் தெற்கு போலீஸாரிடம் புகார் அளித் தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராசுக்குட் டியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT