Published : 02 Aug 2018 07:54 AM
Last Updated : 02 Aug 2018 07:54 AM

வழக்கறிஞர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து; சூழ்நிலையை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்குமாறு தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கும்போது சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கிய உயர் நீதி மன்றம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்தது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹரிராகவன்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸார் தேடி வந்த நிலையில், மதுரை நீதிமன்றத்தில் ஜூலை 6-ம் தேதி ஹரிராகவன் சரண் அடைந்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 92 வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் ஜூலை 24-ம் தேதி ஜாமீன் பெற்றார். இந்நிலையில் ஹரிராகவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஹரிராகவனை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், ‘உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் ஹரிராகவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். இது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக் கும் செயலாகும்’ எனத் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜரானார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, ‘மனுதாரரின் கணவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது தொடர்பான ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 20-ல் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  26-ம் தேதிதான் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்’ என்றார்.

தலையெழுத்தை மாற்றும் இதைத் தொடர்ந்து, ‘ஒரு மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து தனிநபரின் தலையெழுத்தை மாற்றிவிடும், இதனால் குற்றம்

சாட்டப்பட்டவர்கள் தேவையில்லா மல்  பல மாதங்கள் வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தனிநபரின் சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகும். எனவே வருங்காலங்களில் உத்தரவுகளை பிறப்பிக்கும்போது அப்போதைய சூழ்நிலையை தெரிந்து முடிவெடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், வழக்கறிஞர் ஹரிராக வன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஆட் கொணர்வு மனுவை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x