Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

காமன்வெல்த் - டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிக்கு வெள்ளி உறுதி

காமன்வெல்த் போட்டியின் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-7, 12-10, 11-3 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் யாங் ஜி-ஜான் ஜியான் ஜோடியைத் தோற்கடித்தது. ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் மற்றொரு ஜோடியான காவ் நிங்-லீ ஹூ ஜோடியை சந்திக்கிறது.

ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஷரத் கமல் 11-5, 11-6, 11-7, 11-4 என்ற நேர் செட்களில் நைஜீரியாவின் செகுன் டோரிலாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 3-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-5, 2-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் உலகின் 6-ம் நிலை வீரரான சிங்கப்பூரின் லீ ஹுவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்து காலிறுதியை உறுதி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x