Published : 30 Aug 2018 08:24 AM
Last Updated : 30 Aug 2018 08:24 AM

மதவாத சக்தியை எதிர்க்கவே திமுகவுடன் கூட்டணி: ஆர்.நல்லகண்ணு தகவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. மத வாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் உள் ளது. மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என் பதற்காகவே, நாங்களும் அவர் களுடன் அணி சேர்ந்துள்ளோம். இந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

காவிரியில் அதிகளவில் நீர் தண்ணீர் வந்தும், நம்மால் அதை சேமிக்க முடியவில்லை. மணல் கொள்ளையாலும், நீர்நிலைகளை முறையாக தூர்வாராததாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. இதற்கு முழு காரணம் அதிமுக அரசுதான். தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகளை தூர்வாரியது தொடர்பாக பொதுப்பணித் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x