Published : 23 Aug 2018 11:57 AM
Last Updated : 23 Aug 2018 11:57 AM

திருப்பூர் அருகே கார் மோதி விபத்து: சாலையோரம் நின்றிருந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

திருப்பூர் அருகே கார் மோதி விபத்து ஏற்பட்டதில், சாலையோரம் நின்றிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து கோபிக்கு திருமணத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் திரும்பும் வழியில் குன்னத்தூர் அருகே நெட்டிச்சிபாளையம் பிரிவில் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது கார் மோதி கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த சுப்பிரமணி, பிரவீன் ஜெகநாதன், முனீஸ் நால்வரும் உயிரிழந்தனர்.

சாலையோரம் நின்றிருந்த இளவரசி, பொங்கியண்ணன் மற்றும் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் என மூவர் படுகாயங்களுடன் கோவை மற்றும் கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x