பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் வலியுறுத்தி, கோரிக்கை முழக்க கூட்டம் மதிய இடைவேளையில் தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடத்தினர். இதில் சிலர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர் கோஷமிட்டனர். | படம்: ம.பிரபு  |
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் வலியுறுத்தி, கோரிக்கை முழக்க கூட்டம் மதிய இடைவேளையில் தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடத்தினர். இதில் சிலர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர் கோஷமிட்டனர். | படம்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி தலை​மைச் செயலக ஊழியர்​கள் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழக அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் அமல்​படுத்​து​வது, மத்திய அரசைப்பின்பற்றி அகவிலைப்​படியை ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்​கு​வது, அரசுத் துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி தமிழ்​நாடு தலை​மைச்​ செயலக சங்​கம் சார்​பில் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது கோரிக்கை முழக்க போராட்​டம் நடந்​தது.

தலை​மைச் ​செயல​கம் அமைந்​துள்ள நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தி்ல் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் ஏராள​மான அலு​வலர்​கள், ஊழியர்​கள் கலந்​து​கொண்​டனர். இதில், தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன் பேசும்​போது, ``தி​முக​வின் பிர​தான வாக்​குறு​தி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் இன்​னும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

இதுதொடர்​பாக அமைக்​கப்​பட்ட குழு​வும் அறிக்​கையை சமர்ப்​பிக்​காமல் காலம் கடத்தி வரு​கிறது. இது கண்​டிக்​கத்​தக்​கது. அதே​போல், அகவிலைப்​படியை மத்​திய அரசு உயர்த்தி வழங்​கி​யுள்ள நிலை​யில், தமிழக அரசு இன்​னும் உயர்த்​த​வில்​லை. அரசுத் துறை​களில் லட்​சக்​கணக்​கில் காலி​யிடங்​கள் உள்​ளன. அவற்றை நிரப்​பாமல் அரசுப் பணி​கள் தனி​யார்​மய​மாகி வரு​கின்​றன.

அரசு பணி​யிடங்​களை நிரப்​பாமல் தனி​யார்​மய​மாக்​கு​வதும் இட ஒதுக்​கீடு இல்​லாமல் செய்​வதும்​தான் சமூக நீதி​யா?'' என்​றார். இதற்​கிடையே, அரசு ஊழியர் ஒரு​வர், “தலை​மைச் செயலக சங்​கம் சரி​யாக செயல்​பட​வில்​லை, 4 ஆண்டு காலம் பொறுமை​யாக இருந்​து​விட்டு தற்​போது போராட்​டத்தை நடத்​துகிறீர்​களே?” என்று சங்க நிர்​வாகி​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதனால் அங்கு சிறிது நேரம்​ சலசலப்​பு ஏற்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in