தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு: பிரச்சார வாகன கேமரா பதிவு சிபிஐயிடம் ஒப்படைப்பு

கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம், தவெக பிரச்சார வாகன கேமரா பதிவு, ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வந்த தவெக வழக்கறிஞர் உள்ளிட்டோர்.
கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம், தவெக பிரச்சார வாகன கேமரா பதிவு, ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வந்த தவெக வழக்கறிஞர் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கரூர்: கரூர் துயர சம்​பவம் தொடர்​பாக தவெக பிரச்​சார வாக​னத்​தின் கேமரா பதிவு, ஆவணங்​கள் சிபிஐ அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

கரூரில் தவெக பிரச்​சா​ரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

தவெக பிரச்​சார வாக​னத்​தில் இருந்த கேமரா பதிவு​கள், நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களின் விவரங்​களை அளிக்​கு​மாறு, பனையூரில் உள்ள தவெக அலு​வல​கத்​தில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதி​காரி​கள் சம்​மன் அளித்​திருந்​தனர். இதையடுத்​து, கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள சிபிஐ அதி​காரி​களிடம், சிசிடிவி கேமரா பதிவு​கள் அடங்​கிய வீடியோக்​கள், நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றோரின் விவரங்​கள் அடங்​கிய ஆவணங்​களை தவெக வழக்​கறிஞர் அரசு, பனையூர் அலு​வலக உதவி​யாளர் குருசரண் உள்​ளிட்​டோர் நேற்று ஒப்​படைத்​தனர். தனி​யார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள் என 20-க்​கும் மேற்​பட்​டோரிடம் கடந்த 3 நாட்​களாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in