Published : 28 Aug 2018 09:38 AM
Last Updated : 28 Aug 2018 09:38 AM

புழல் சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி வளர்மதி மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி வளர்மதி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம் கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நிதி திரட்டினர். இதனை நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் ஸ்டாலின் படம் எடுத்தார். அப்போது அந்த போலீஸ்காரருக்கும், மாணவி வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வளர்மதி உட்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வளர்மதி சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால், நேற்று முன்தினம் இரவு மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவி சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் மாணவி வளர்மதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x