ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்
Updated on
1 min read

இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 37 நாட்களாக வேலைநிறுத்தம் செய்துவந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். வரும் திங்கள்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்குச்செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 62 விசைப்படகுகள், 94 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர் களுக்கு உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆக.13-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ச இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை சிறைகளி லுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் விசைப்படகுகள் விடுவிப்பதைப் பற்றி அறிவிக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளுக்கு முறையாக எந்த ஒரு பதிலும் கிடைக்காததால், வேலைநிறுத்தத்தை தொடர்வது வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை கருத்தில் கொண்டு போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். வரும் திங்கள் கிழமை முதல் மீனவர்கள் கடலுக்குச்செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in