பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் மறியல் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் மறியல் போராட்டம்
Updated on
1 min read

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கத்​தின் நிர்​வாகி​கள் சென்​னை​யில் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். தமிழகத்​தில் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி சிபிஎஸ் (பு​திய ஒய்​வூ​தி​யம்) ஒழிப்பு இயக்​கம் சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன் ஒரு பகு​தி​யாக சென்னை எழில​கம் அருகே மறியல் போ​ராட்​டம் நேற்று நடை​பெற்​றது.

மாநில இணை ஒருங்​கிணைப்​பாளர் கே.​முனி​யாண்டி தலை​மை​யில் நடந்த இந்த போராட்​டத்​தில் 100-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள சமூகநலக் கூடத்​தில் வைத்​திருந்து மாலை​யில் விடு​வித்​தனர்.

இது தொடர்​பாக போராட்​டக் குழு​வினர் கூறிய​தாவது: திமுக தனது தேர்​தல் வாக்​குறு​தி​யில் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாக அறி​வித்​தது. ஆனால் இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. அதற்கு மாறாக பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது குறித்து மூவர் குழு கடந்த பிப்​ர​வரி​யில் அமைக்​கப்​பட்​டது. இந்​தக் குழு கூடு​தல் அவகாசம் கேட்​டுள்​ளது. அதற்​குள் தேர்​தல் வந்​து​விடும்.

எனவே இந்த மூவர் குழுவை கலைத்​து​விட்​டு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும். இல்​லை​யெனில் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​படும். சென்னை மண்​டலம் தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு நிர்​வாகி​கள் இன்று (அக்​.16) மறியலில் ஈடுபட உள்​ளனர். அதன் பின் டிசம்​பர், ஜனவரி​யில் வேலைநிறுத்​தப் போ​ராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in